ஞான. வள்ளுவன், வைத்தீசுவரன்கோயில்
சந்துவழி புகுந்துவந்த அந்துமணியே
வந்தேறி வஞ்சகமே – கருப்புசட்டை அருமைபற்றி
வருத்தமிலா உனக்கென்னத் தெரியும்? போடா.
கருத்தநிறத் தமிழர் வாழ்வைப்
பெருத்தவுடல் பார்ப்பனர்கள்
பறித்துக் கொண்ட வரலாற்றின்
பக்கத்தைக் கிழிக்க வந்த கத்தரிக்கோல்.
இனமானம் காக்கவந்தக் கேடயமாய்
தன்மானம் ஊட்டவந்தத் தேன்குடமாய்
உன்எண்ணம் போக்கவந்தப் போர்வாளாய்
எம்நெஞ்சில் பதிந்துவிட்ட அடையாளம் கருஞ்சட்டை..
எங்கள் இழிவுகளைத் துடைக்கவந்த துடைப்பானாய்
தாங்கா அழிவுகளைத் தடுக்கவந்த அணைக்கட்டாய்
மங்காத மூடத்தை முறிக்கவந்த கோடரியாய்
சனாதனம் அறுக்கவந்த பனங்கருக்காய்
கடைசி பூணூல் உள்ளவரை
எமை விட்டகலாதச் சின்னமாய்
விளங்கிடுமே கருஞ்சட்டை நிரந்தரமாய்.