சட்டமன்றத்தில் இன்று எல்.கணேசன், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், சிவராஜ் பாட்டீல் ஆகியோர் மறைவுக்கு இரங்கல்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 21- தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், சட்டமன்ற மேனாள் உறுப்பினர்கள் மற்றும் ஏவிஎம்.சரவணன் உள்ளிட்ட மறைவுற்றவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்று (21.1.2026) காலை 9.30 மணிக்குக் கூடியதும், சட்டப் பேரவையின் மேனாள் உறுப்பினர்களான சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் ஆகியோர் மறைவு குறித்து – அவர்கள் குறித்த இரங்கற் குறிப்புகள் வாசித்தும், இரங்கல் தெரிவித்தும் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

அதேபோன்று, முருகப்பா குழுமத்தின் மேனாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன், பிரபல கவிஞர் ஈரோடு தமிழன்பன் (என்கிற) ந.செகதீசன், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன், முதுபெரும் அரசியல் தலைவர் சிவராஜ் பாட்டீல், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பொன்னுசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு இரங்கல் தெரிவித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு மணித்துளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து “பேரவை நிகழ்ச்சிகள் இத்துடன் முடிந்து மீண்டும் நாளை காலை தொடங்கும்” என சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *