ஆரம்ப சுகாதார நிலைய தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,500 இருந்து ரூ.7,376 ஆக உயர்வு ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.20- அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் பேறுசார் குழந்தைகள் நலத் திட்டபகுதி நேர தூய்மைப் பணியாளர்களுக்கு மாத தொகுப்பூதியத்தை ரூ.1,500இல் இருந்து ரூ.7,376 ஆக உயர்த்தி, அதற்கான ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (19.1.2026) சென்னையில் வழங்கினார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாத ஊதியம் ரூ.500 என்று இருந்தது. 4 ஆண்டுகள்தொடர்ச்சியாக பணியாற்றியவர்களுக்கு மாதம் ரூ.1,000 என்று உயர்த்தப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு ரூ.1,500 என்று உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

கரோனா காலங்களில் 938 பேர் தற்காலிக பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டு அந்தந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ரூ.27,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள 1,575 பேருக்கு தற்போது ஊதியம் உயர்த்தி வழங்கும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டங்களில் பணியிடங்கள் காலியாகும் போது, அவர்களின் கல்வித் தகுதிப்படி மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தேர்ந்தெடுத்து பல்நோக்கு மருத்துவ பணியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *