‘பக்தீ’ கோவிலில் விளக்கேற்றும்போது தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி பலி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 19- கோவிலில் விளக் கேற்றும்போது, புடவையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார்.

கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி, 70. இவர், நேற்று முன்தினம் இரவு தன் உறவினர் ஜெயந்தியுடன், கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில் உள்ள பாரதீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றார்.

அங்கு, அகல் விளக்கேற்றும்போது, விளக்கில் இருந்து தீ அவரது சேலையில் பரவியது.

இதில், சாந்தியின் இரு கால்கள் மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *