2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 1.75 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி நிறைவு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 19–- 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சரிபார்ப்பு பணி தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்: தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1.75 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளன. தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள 1.10 லட்சம் கட்டுப்பாட்டு அமைப்புகள் தகுதியான நிலையில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

விவிபேட் இயந்திரங்கள்: வாக்காளர்கள் தாங்கள் அளித்த வாக்கை உறுதி செய்யும் 1.16 லட்சம் விவிபேட் (VVPAT) இயந்திரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சரிபார்ப்பு முறை: இந்த முதற்கட்ட சரிபார்ப்பு பணியானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் இந்த இயந்திரங்களின் தொழில்நுட்ப செயல்பாடுகளை விரிவாக ஆய்வு செய்தனர். பழுதான இயந்திரங்கள் தனியாக பிரிக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ள இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கூடிய காப்பகங்களில் சீல் வைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த இயந்திரங்களை தொகுதிகள் வாரியாக ஒதுக்கீடு செய்யும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *