ஒன்றிய அரசின் மீது தமிழ்நாடு நிதி அமைச்சர் குற்றச்சாட்டு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிவகாசி, ஜன. 19- ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருவதாக, சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சிவகாசி மாநகராட்சியில் ரூ.45.6 கோடி மதிப்பில் திருத்தங்கல் ரயில்வே மேம்பால கட்டுமான பணி மற்றும் ரூ.58 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தை ஒப்பந்த காலத்திற்கு முன்னரே கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு. திருத்தங்கல் பாலம் கட்டுமானப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

சிவகாசி சுற்றுசாலை திட்டத்தில் முதற்கட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இரண்டாம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. சிவகாசிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம், பல்நோக்கு மாநாட்டு கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றி மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அவர் முதலமைச்சராக வந்த பின்னர் தான் சிவகாசியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் சிவகாசி அடிப்படை என்பதால் பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி தொகுதிக்கு முதலமைச்சர் தான் விடியலை தந்து உள்ளார்.

தமிழ்நாட்டில் 1.31 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவு, கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்குவதில்லை. நிதி அமைச்சர் என்ற முறையில் ஒவ்வொரு முறையும் நான் டில்லி செல்லும் போது நிதி கேட்டு கோரிக்கை விடுத்தும், நம்மிடம் பெரும் வரிக்கு ஈடான நிதி பகிர்வு நமக்கு வருவதில்லை. ஒன்றிய அரசு நிதி தராவிட்டாலும், முதலமைச்சர் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி பணிகளை செய்து வருகிறார், இவ்வாறு அவர் பேசினார்.

மேயர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாநகர் திமுக செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *