வாசிங்டன்,ஏப்.23- கருக்கலைப்பு மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கருக்கலைப்பு மற்றும் கருத் தடை உரிமைகளுக்காக பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளில் மகளிர் உரிமை கோரி மனித உரிமைப்போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கருக்கலைப்பு, கருத்தடைகளுக்கு மதத்தின் பெயரால் உள்ள தடைகளை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள், மக ளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் போராடி வருகின்றனர். போராட் டத்தின் விளைவாக கருத்தடை மற்றும் கருக்கலைப்பு உரிமை பெற்று வருகிறார்கள்.
அமெரிக்காவில் பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கிடைப்பதைத் தடுக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவைஎதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், கீழமை நீதிமன்றத்தின் தடையை அமெரிக்க உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.
‘மைஃப்ரிஸ்டோன்’ என்ற கருக் கலைப்பு மாத்திரையை தயாரிக்கும் நிறுவனமும், அமெரிக்க அரசும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அந்த மாத்திரைக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கீழமை நீதிமன் றத்தின் உத்தரவை ரத்து செய்யு மாறு கோரிக்கை விடுக்கப்பட் டிருந்தது. அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, அந்த மாத்திரைகள் பெண்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
கருக்கலைப்பு என்பது அரச மைப்புச் சட்டத்தின் கீழ் பெண் களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த 1973-இல் வழங்கியது.
எனினும், அந்த அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது பன் னாட் டளவில் விமர்சனத்துக்குள் ளானது.
அந்தத் தீர்ப்பைத் தொடந்து, கருக்கலைப்பு தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங் களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.