அமெரிக்காவில் பெண்கள் கருத்தடை உரிமை உறுதி செய்தது அந்நாட்டு உச்சநீதிமன்றம்

1 Min Read

அரசியல்

வாசிங்டன்,ஏப்.23- கருக்கலைப்பு மாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை அமெரிக்க நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருக்கலைப்பு மற்றும் கருத் தடை உரிமைகளுக்காக பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளில் மகளிர் உரிமை கோரி மனித உரிமைப்போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கருக்கலைப்பு, கருத்தடைகளுக்கு மதத்தின் பெயரால் உள்ள தடைகளை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர்கள், மக ளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் போராடி வருகின்றனர். போராட் டத்தின் விளைவாக கருத்தடை மற்றும் கருக்கலைப்பு உரிமை பெற்று வருகிறார்கள்.

அமெரிக்காவில் பெண்களுக்கு கருக்கலைப்பு மாத்திரைகள் கிடைப்பதைத் தடுக்கும் கீழமை நீதிமன்ற உத்தரவைஎதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், கீழமை நீதிமன்றத்தின் தடையை அமெரிக்க உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தர விட்டுள்ளது.

‘மைஃப்ரிஸ்டோன்’ என்ற கருக் கலைப்பு மாத்திரையை தயாரிக்கும் நிறுவனமும், அமெரிக்க அரசும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அந்த மாத்திரைக்கு இடைக்காலத் தடை விதிக்கும் கீழமை நீதிமன் றத்தின் உத்தரவை ரத்து செய்யு மாறு கோரிக்கை விடுக்கப்பட் டிருந்தது. அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, அந்த மாத்திரைகள் பெண்களுக்குக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

கருக்கலைப்பு என்பது அரச மைப்புச் சட்டத்தின் கீழ் பெண் களின் அடிப்படை உரிமை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த 1973-இல் வழங்கியது.

எனினும், அந்த அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது பன் னாட் டளவில் விமர்சனத்துக்குள் ளானது.

அந்தத் தீர்ப்பைத் தொடந்து, கருக்கலைப்பு தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங் களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *