சிதம்பரம், ஜன. 17- தந்தை பெரியார் படிப்பக செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் கோவி.சுந்தரமூர்த்தி அவர்களின் படத்திறப்பு 02.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு, சிதம்பரம் தெற்கு வாணியர்தெரு, நாடார் திருமண மண்டபத்தில் – மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கோவி.பெரியார்தாசன் அறிமுக உரை யாற்றினார்.
மாவட்டக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் படத்தினை திறந்துவைத்து உரையாற்றினார். படிப்பக துணைத்தலைவர் ஆறு.கலைச்செல்வன் வரவேற்புரை யாற்றினார் சிதம்பரம் முன்னாள் நகர் மன்றத் தலைவரும் அனைந்திந்திய அண்ணா தி.மு.க. மாவட்ட அவைத் தலைவருமான எம்.எஸ்.என்.குமார், முன்னாள் தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர், சிவா. கண்ணதாசன், சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினர் தோழர் மு.சா. பெரியார் படிப்பக பொருளாளர் நீதிராசன், நகர கழகத் தலைவர் கோவி. குணசேகரன், வடலூர் நகர கழகத் தலைவர் புலவர் சு.இராவணன், ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், குமராட்சி ஒன்றிய தலைவர் வை.அர்ச்சுனன், தோழர் முருகேசன், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இறுதியான கோவி.சுந்தர மூர்த்தியின் மகன் சு.வீரமணி நன்றி யுரையாற்றினார்.
