நீட் தேர்வில் இருந்து விலக்கு அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,ஏப்.23- வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் தாமதமாக திறப்பது குறித்து தற்போதே முடிவு ஏதும் செய்ய இயலாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் அய்அய்டி உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் வகை யில் ஜேஇஇ நுழைவுத் தேர்வை எதிர் கொள்வதற்கான பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் ஓர் அங்கமான இத்திட்டத்தின் தொடக்க விழா சென்னை சைதாப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 

இத்திட்டத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: 

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தான் இந்த பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளோம். 

வரும் காலங்களில் அதிகப்படியான மாணவர்கள் ஜேஇஇ பயிற்சியில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். 

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பதற்கு காலதாமதம் ஏற்படுமா என்று கேட் கிறீர்கள்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் போது வெயில் தாக்கத்தை வைத்து முடிவு செய்யலாம்.

 நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்கான அனைத்து சட்டப் போராட்டங்களும் தொடரும். 

-இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *