கேரள அரசிடம் பேசி சிறுவாணி விவகாரத்திற்கு உரிய நடவடிக்கை – அமைச்சர் துரைமுருகன் உறுதி

Viduthalai
1 Min Read

அரசியல்

சென்னை,ஏப்.23- சட்டப் பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி. வேலுமணி, சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டும் தடுப்பணை பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது முக்கியமான பிரச்சினை. இதை அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதாக செய்தி வந்தவுடன் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன். 

அணை கட்டுவது உண்மையானால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது குடிநீர் ஆதார பிரச்சினை. சிறுவாணிக்கு வரும் தண்ணீரைத் தடுத்து அணை கட்டினால் தண்ணீர் வராது.

எனவே அணை கட்டப்பட்டால் அதை தடுத்து நிறுத்த வேண்டும். சிறுவாணி தான் கோவை மாவட்ட மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், கேரளா அரசு 70 மில்லியன் கனஅடி வரை நீரை தேக்கும் அளவு அணை கட்டியிருப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். 

தமிழ்நாடு – கேரளா மாநில அதிகாரிகளுடன் கூட்டு கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற் கொள்ளப்படும். தேவைப்பட்டால் நானே நேரில் சென்று கேரளா அரசை வலியுறுத்தி நல்ல தீர்வை பெற்றுத் தருவேன் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *