தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகட்கு மாலை அணிவிப்பு
எண்ணூர், ஏப்.23- எண்ணூர் பகுதி கழகத்தின் சார்பாக அண்ணல் அம்பேத்கர் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம், 15.4.2023 அன்று மாலை 6 மணிக்கு எண்ணூர் கடைவீதியில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்திற்கு எண்ணூர் பகுதி தலைவர் மு.மணி காளியப்பன் தலைமை வகித்தார்.
பகுதி செயலாளர் பொ.இராமச்சந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், தி.மு.க. வர்த்தகர் அணி இணை செயலாளர் வி.தியாகராசன் மற்றும் தி.மு.க. தோழர்கள் மா.வெங்கடேசன், மா.இலட்சுமணன், பா.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அண்ணல் அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கை
வடசென்னை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இர.பு.அன்புச்செழியன், திருவொற்றியூர் மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் வை.ம.அருள்தாசன் உரை யாற்றினர்.
நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற்றினார்.
அண்ணல் அம்பேத்கரின் போராட்ட வாழ்க்கை நிகழ்வுகளை, வரலாற்றுச் குறிப்புகளை எடுத்துக் கூறினார்.
அவ்வட்டாரத்துப் பெருமக்களும், மீனவ சமுதாயத் தோழர்களும் வந்திருந்து கழக சொற்பொழிவாளரது உரையினை ஆர்வத்தோடு செவிமடுத்தனர். கடை வீதியின் இருபுறமும் கழகக் கொடிகள் கட்டப்பட்டு, மேடையில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத் கர் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து சிறப்பாக வைக்கப்பட்டிருந்தன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் சிலைகளுக்கு மாலை
முன்னதாக, வடசென்னை மாவட்ட பொறுப்பாளர்களும், எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளின் கழகத் தோழர் கள், அனைத்துக் கட்சித் தோழர்கள் பெருமகிழ்ச்சியுடன் வாழ்த்தொலி முழங்கியவாறு ஒன்று குழுமி, எண்ணூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார், அண்ணல் அம்பேத் கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப் பட்டது.
கலந்துகொண்டோர்
மாநில ப.க. பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப்பாளர் சி.பாஸ்கர், இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் சத்தீசுகுமார், ஆவடி மாவட்ட கழக அமைப்பாளர் உடுமலை வடிவேல், திருவொற்றியூர் பகுதி தலைவர் ஓவியர் பெரு.இளங்கோ, துணைச் செயலாளர் சே.தமிழரசி, புதுவண்ணை செயலாளர் க.செல்வன், சோ.இராமு, மகளிரணித் தோழியர்கள் மு.இந்திரா, ந.சத்தியா, வி.மணியம்மாள், ந.அனியா, அ.கோட்டீசுவரி, ஆர்.தமிழ்ச்செல்வி, மா.சேகர், செம்பியம் கழக செயலாளர் பா.கோபாலகிருட்டிணன், ச.இராசேந்திரன், வண்ணை வெங்கடேசன், அம்பேத்கர், டேவிட், அந்தோணி மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.
அனைத்துத் தோழர்களுக்கும், மாவட்ட தலைவர் வெ.மு.மோகன் இல்லத்தில் அவர்தம் குடும்பத்தினரால் இரவு உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.
நிறைவாக திருவொற்றியூர் நகர செயலாளர் ந.இராசேந்திரன் நன்றி கூறினார்.