புதுடில்லி,ஏப்.23- ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று (22.4.2023) ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டில்லியில் 6 பேரும், மராட்டிய மாநிலத்தில் 5 பேரும் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு மருத்துவமனை களிலிருந்து 9,833 பேர் குணமடைந்துள்ளனர்.
எனினும் புதிதாக 10,112 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 67,806-ஆக அதிகரித்துள்ளது.