அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் வழிகாட்டுதல்கள் வெளியீடு

1 Min Read

 சென்னை,ஏப்.23- தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை இலவச உணவு வழங்கப்படுகிறது. 1,547 அரசு ஆரம்பப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 2023-2024 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.  இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உரிய முறையில் காலை உணவு வழங்கவும் அவர்கள் பசியின்றி இருப்பதை உறுதி செய்யவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *