குமரி மாவட்ட கழக சார்பாக உலக புத்தக நாள் நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது. மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக இளைஞரணி செயலா ளர் எஸ். அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். உலக புத்தக நாளில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் நூல்கள் திராவிட இயக்க நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நூல்கள் பரப்புரை செய்யப்பட்டு பலரும் நூல்களை வாங்கிச்சென்றனர். புத்தகங்களின் புத்தாக்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.கோகுல், மாநகர கழக துணைத் தலைவர் கவிஞர் செய்க்முகமது தோழர் ரெகுராஜன் புத்தக ஆர்வலர் இராஜா உட்பட பலரும் ஆர்வமுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கன்னியாகுமரியில் உலக புத்தக நாள்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books