நீரிழிவு நோய் தடுப்புக்கு இயற்கை சர்க்கரை அறிமுகம்

1 Min Read

அரசியல்

முன்னணி உணவு நிறுவனங்களில் ஒன்றாகிய தத்வா ஹெல்த் அண்ட் வெல்னஸ் சுத்திகரிக் கப்படாத, ரசாயனங்கள் –  வேறு சேர்க்கை பொருட்கள் இல்லாத, இயற்கையாகவே குறைந்த கிளைசெமிக் இண்டக்ஸ் கொண்ட ‘கேசரி கோல்டன் சுகர்’ சர்க்கரையை சென் னையில் அறிமுகப்படுத்தியது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சச்சின் ஜெயின் கூறுகையில்: “கேசரி கோல்டன் சுகரை சென்னை சந்தையில் அறி முகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகி றோம். தொற்றுநோய்க்குப் பிந்தைய காலக் கட்டத்தில், நுகர்வோர் ஆரோக்கிய உணர்வு மற்றும் சுய விழிப்புணர்வுடன் எதை உட்கொள் கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக, உணவுப் பிரிவில் பல்வேறு புதுமைகள் கண்டறி யப்பட்டுள்ளன. 

இந்தியாவில் சர்க்கரை சந்தையை உற்று பார்க்கையில், சர்க்கரையை ஆரோக்கியமா கவோ அல்லது சிறந்ததாகவோ மாற்ற எந்த வொரு ஆராய்ச்சியும், மேம்பாடும் நடத்தப்பட்ட தாகத் தெரியவில்லை. உண்மையில், இப்போது நுகர்வோர் ஆரோக்கியமான பதிலீடை தேடி வருகிறார்கள். அதை கண்டுபிடிப்பது இன்று கடினமாக உள்ளது. சர்க்கரை தொடர்பான பிரச்சனைகளை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பார்த்து வருகிறோம். உங்களது ஆரோக்கியத்தை மட்டும் கவனத்தில் கொண்டு, அதே நேரத்தில் சுவையில் சமரசமும் செய்து கொள்ளாமல் உட்கொள்ளக்கூடிய ஒரு தயா ரிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகி றோம்.

ஆஸ்திரேலியாவின் உள்ள நியூகேன் (Nucane)  நிறுவனத்துடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள் ளோம். இதன் மூலம் அவர்களின் உலகளாவிய காப்புரிமை பெற்ற தொழில்நுட்பத்துடன் இந் தியாவில் ‘கேசரி கோல்டன் சுகரை’ அறிமுகப் படுத்துவது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக் கிறது. கேசரி கோல்டன் சுகர் சுத்திகரிக்கப்படாத ரசாயனங்கள் அல்லது சேர்க்கைகள் எதுவும் இல்லாத, இயற்கையாகவே குறைந்த கிளை செமிக் இண்டக்ஸ் கொண்டது. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு எதிரான போராட் டத்தில் இது உறுதியாக உதவும். ஆரோக்கியமான சர்க்கரையைத் தேடும் நுகர்வோருக்கு இது ஒரு சரியான மாற்றாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *