பாலியல் தொல்லை: பா.ஜ.க. எம்.பி பிரிஜ்பூஷனுக்கு எதிராகப் போராட்டம்

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஏப்.24  இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், மனரீதி யாக துன்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டிய இந்திய முன்னணி மல்யுத்த வீரர், வீராங் கனைகள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஜனவரி மாதம் டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர். 3 நாள் நீடித்த போராட்டத்தை பேச்சுவார்த்தையில் முடிவுக்கு கொண்டு வந்த ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு குறித்து விசா ரிக்க குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட மேற்பார்வை கமிட்டியை அமைத்தார். 

பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேள தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யு மான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி மலியுத்த வீரர், வீராங்கனை கள் நேற்று (23.4.2023) முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர். நேற்று தொடங்கிய போராட் டம் இரவிலும் நீடித்தது. தொடர்ந்து இன்றும் (24.4.2023) போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தங்கள் போராட்டத்திற்கு யார் வேண்டுமானாலும் ஆதரவு தரலாம் என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *