சபரிமலை அய்யப்பன் கோயிலில் மோசடிகள் தொடர்கிறது! கோயில் அர்ச்சகர் கைது!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவனந்தபுரம், ஜன.10 சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள சபரி மலை அய்யப்பன் கோயில் கருவறையின் கதவுகள் மற்றும் பீடத்துடன்கூடிய 2 துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்டது. அதன் பிறகு 4.5 கிலோ தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வரு கிறது. இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரி கண்டரரு ராஜீ வரு நேற்று (9.1.2026) கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கூறும் போது, “முன்னாள் அர்ச்சகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரியை, தேவசம் போர்டிடம் தந்திரி கண்டரரு ராஜீவரு அறிமுகம் செய்திருக்கிறார். அவரது அறிவுரைப்படியே துவார பாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணி உன்னிகிருஷ்ணனிடம் ஒப்ப டைக்கப்பட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக ராஜீ வருவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தங்கம் திருட்டு வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.

சபரிமலை அய்யப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக இதுவரை 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கி றது.

அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “தங்கம் திருட்டு வழக்கில் கேரள காவல்துறையினர் 11 பேரை கைது செய்துள்ளனர். நீதி மன்ற அனுமதியுடன் அவர்களை எங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்’’ என்று தெரிவித்தன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *