கடவுள் சக்தி இதுதானா?

1 Min Read

உத்தரகண்டில் ‘புனித’ பயணத்தில் பக்தர்கள் இருவர் உயிரிழப்பு

டேராடூன், ஏப். 25- உத்தரகண்டில் சார்தாம் யாத்திரை என்கிற பெயரில் ‘புனித’ பயணத்தை பக்தர்கள் மேற் கொள்கின்றனராம். அப்பயணம் தொடங்கிய முதல் நாளிலேயே (22.4.2023) பக்தர்கள் இருவர் உயிரிழந்து உள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அதில் யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இரண்டு கோயில்களும் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த கனக் சிங்(வயது 62) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தினேஷ் படிதார் (வயது 49) ஆகிய இருவரும் யமுனோத்ரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். 

கடந்தாண்டு அமர்நாத் பயணத்தின்போது 300 பேர் உயிரிழந்ததாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *