உலகத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு மேனாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு திமுக அரசுக்கு பாராட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ேகாவில்பட்டி, ஜன.9 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அதிமுக மேனாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது கூறியதாவது:

இலவச மிதிவண்டி மற்றும் கட்டணமில்லா பயண அட்டை,  புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் மற்றும் புத்தகப்பை. வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற கல்வி உபகரணங்கள். காலணி முதல் மடிக்கணினி வரை அனைத்தும் இந்த அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.

“இந்தக் காலத்து மாண வர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, மாணவ-மாணவிகள் சமு தாயத்தில் சிறந்த நிலைக்கு உயர வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார்.

மடிக்கணினி திட்டம்: தமிழ்நாட்டின் பெருமை மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய கடம்பூர் ராஜு, “உலகத்திலேயே படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டைப் பார்த்துதான் இந்தியாவின் பிற மாநிலங் களும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங் கின. இடையில் நிறுத்தப்பட் டிருந்த இந்தத் திட்டம் தற்போது மீண்டும் தொடங் கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

திமுக அரசின் தற்போ தைய முடிவை வரவேற்ற அவர், “சுமார் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம்  வந்திருக்கிறதே, அது பாராட்டத்தக்கது,” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *