‘ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்’ : வைகோ பேட்டி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருச்சி, ஜன.9 ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண் டுமென ஒருபோதும் தப்பித் தவறிக்கூட பேசியது கிடையாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சியில் ஜன.2-ஆம் தேதி சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கிய வைகோ, 12-ஆம் நாள் மதுரையில் பயணத்தை நிறைவு செய்கிறார். தனது 7-ஆவது நாள் பயணத்தைத் தொண்டர் படையினருடன் மேலூர் அருகிலுள்ள கொட்டாம்பட்டியில் இருந்து வைகோ நேற்று (8.1.2026) காலை தொடங்கினார்.அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும். ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆணவம், அகம்பாவம் மிக்க வார்த்தைகளை தமிழ் மண்ணுக்கு வந்து சொல்லிவிட்டுப் போகும் துணிச்சல் வந்துள்ளது. விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ரிலீஸ் தாமதமாவதற்கும், திமுக அரசுக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. எத்தனையோ திரைப்படங்கள் தணிக்கைத் துறையால் சிறிது தாமதம் செய்யப்படுகின்றன. அதுபோல நடந்திருக்கலாம்.ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதை திமுகவோ, கூட்டணிக் கட்சிகளோ எதிர்க்கவில்லை. அவரவர் விருப்பம். பேச்சுரிமைக்கு என்ன அனுமதி உண்டோ. அது போன்று திரைப்பட தயாரிப்புக்கும் உரிமை உண்டு. அவர்கள் தாராளமாக வெளியிடலாம். திரையில் படம் ஓடட்டும்.
இதுவரை ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென ஒருபோதும் ஒருசொல்கூட நானோ, இயக்கத்தின் முன்னணியினரோ தப்பித் தவறியும்கூட பேசியது கிடையாது. எங்களைப் பொறுத்தவரை அப்படியான கோரிக்கை நேற்று வரை எங்களிடம் இல்லை; இனியும் வைக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *