கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

9.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; மக்கள் மகிழ்ச்சி

* ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 500 சதவீதம் கூடுதல் வரி: டிரம்ப் கையெழுத்து.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* மேற்குவங்கத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பரபரப்பு அய் பேக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு: திரிணாமுல் வேட்பாளர் பட்டியல், தேர்தல் வியூகங்கள் பறிமுதல்? உள்ளே புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற முதலமைச்சர் மம்தா.

* வாக்காளர் சிறப்பு திருத்தம் ஒரு சதி; மோடி அரசு மாற்றியுள்ள ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழித்துக் கட்ட வேண்டும், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் சபதம்.

* மோடி அரசின் விபி.ஜி.ராம்.ஜி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கருநாடகா அரசு முடிவு.

* பாஜக -அதிமுக மெகா கூட்டணி தமிழ்நாட்டில் எடுபடாது, தலையங்கம்.

தி இந்து:

* திராவிட மாடல் தொழில்நுட்பத்தை சமூக மேம்பாட்டிற்கான ஒரு கருவியாகக் கருதுகிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்கு மட்டுமான கருவி இல்லை; அது சாமானியர்களை EMPOWER செய்யும் கருவி. இந்த மாற்றம் ஒரு நகரத்தில் மட்டுமே சுருங்கி விடாமல், மாநிலம் முழுவதும் சமமாக பரவுவதையும் உறுதி செய்திருக்கிறோம் என பெருமிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான தீர்ப்பு அரசியலமைப்புச் சட்ட கோட்பாடுகளுக்கு முரணானது என்றும், மாநிலத்தின் நீண்டகால மத நல்லிணக்க மரபைக் குலைக்கும் அபாயம் கொண்டது என்கிறார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* 7 ஆர்எஸ்எஸ் நபர்களுக்கு ஆயுள் தண்டனை: கண்ணூர்: கேரளாவின் தலச்சேரி அமர்வு நீதிமன்றம், 2008இல் சிபிஎம் நிர்வாகி கே. லதீஷ் கொலை வழக்கில் ஏழு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *