வாசிங்டன், ஜன. 9– 66 பன்னாட்டு அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக கருதப்படும் 35 அய்.நா அல்லாத குழுக்கள் மற்றும் 31 அய்.நா அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும் படி அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த உத்தர விடப்பட்டுள்ளது.
அய்.நா. பருவநிலை ஒப்பந் தம் உள்பட 66 சர்வதேச அமைப் புகளிலிருந்து அமெரிக்கா விலகும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு இனி சேவை செய்யாத அமைப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது.
அய்.நா. பருவநிலை ஒப்பந்தம், இந்தியாவும் பிரான்சும் இணைந்து வழிநடத்தும் தூய்மையான எரிசக்தி முன்னெடுப்பான பன்னாட்டு சூரிய சக்தி கூட்டமைப்பு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், பருவ நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு உள்பட 66 அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
