சென்னை, ஜன.9 மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித் துள்ளார்.
தகவல் தொழில்
நுட்பவியல் மாநாடு
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு நேற்று (8.1.2026)நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த மாநாட்டை தொடங்கினோம். தற்போது இந்த மாநாடு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது பெருமையாக உள்ளது. மற்ற மாநிலங்களை விட தொழில் நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
தொழில்நுட்பத்துறையில் நாம் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம் கலைஞர். தமிழ்நாட்டின் அய்.டி பாலிசியை கொண்டு வந்தவர் கலைஞர். தமிழ்நாட்டின் மய்ய அச்சு, தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அங்கமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத் திற்கான கருவியாக பார்க்க வேண்டும்.
எல்லா துறைகளும் ஒரே இலக்கில் செல்கின்றன. அறிவியல் அணுகு முறைகளை தமிழ்நாடு கையாளுகிறது. தொழில்நுட்பம் எல்லோரையும் சமமாக சென்றடைய வேண்டும். புதுயுகத் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. உலகளாவிய திறன் மய்யத்தின் தலைநகராக தமிழ்நாடு மாறி வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
நீங்கள் எல்லோரும் ஆச்சரியப் படுமாறு ஒரு டேட்டாவை சொல்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என்று ஒன்றிய அரசு சொல்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் பதில். ஒன்றிய அரசு சொல்லும் இந்த தரவு தான் திராவிட மாடல். ஆற்றல் மிக்க மனித வளம் தான் வளர்ச்சிக்கு முக்கிய காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
