மும்பையில் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு ‘பெரியார் விருது” தமிழர் தலைவர் வழங்கினார்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பை பாண்டூப் (மேற்கு) பகுதியில், வில்லேஜ் சாலையில் உள்ள, கல்வித் தந்தை தேவதாசன் பிரைட் உயர்நிலைப் பள்ளியின் ‘தேவதாசன் அரங்கில்’ நடைபெற்ற, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – 2026 மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில், பெரியார் பெருந்தொண்டர்களான என்.வி.சண்முகராஜன், ஆ.பாலசுப்பிரமணியம், கு.தர்மலிங்கம்,
இரா.ஓம்பிரகாஷ் (பூனே) ஞான.அய்யாப்பிள்ளை, எஸ்.பி.செழியன் ஆகியோருக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘பெரியார் விருது” வழங்கி சிறப்பித்தார்கள். உடன் மும்பை இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன், மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன், பெரியார் பாலா உள்ளிட்டோர் உள்ளனர். (மும்பை, 3.1.2025)

திராவிடர் கழகம்

மும்பை பாண்டூப் (மேற்கு) பகுதியில், வில்லேஜ் சாலையில் உள்ள, கல்வித் தந்தை தேவதாசன் பிரைட் உயர்நிலைப் பள்ளியின் ‘தேவதாசன் அரங்கில்’ நடைபெற்ற, ‘‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – 2026 மாநாட்டின் இரண்டாம் நாள் ஆங்கில அமர்வில், சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட இங்கர்சால் – ரஞ்சனி ஆகியோருக்குப் பிறந்த பெண் மகவுக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், ‘‘இலக்கியா மணியம்மை” என்று பெயர் சூட்டினார். ‘இங்கர்சால்’ இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் – நங்கை ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. (மும்பை, 4.1.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *