சென்னையில் பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் திராவிட மாணவர் கழகத்தின் சந்திப்புக் கூட்டம் (DSF)

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.8 சென்னை அண்ணா பல்கலைக் கழகம், சென்னை இதழியல் கல்வி நிறுவனம், சென்னை பல்கலைக் கழகம், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் விடுதி ஆகிய இடங்களில் 07.01.2026 அன்று திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்றது.

திராவிடர் கழகம்

 

சென்னை அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம்  மதியம் 12.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழகத் தலைவராக ப.வெங்கடேஷ், செயலாளராக ரொசாண்டோ நியமிக்கப்பட்டனர்.  இதில் பல்கலைக் கழக மாணவர்கள் சா.மூ.அபிநயா, சிறீதர், கோகுல், கிரிவிஷ், சந்தோஷ் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதனை  தொடர்ந்து,

திராவிடர் கழகம்

மதியம் 2.00 மணிக்கு சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனை  தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு சென்னை மாநிலப் பல்கலைக்கழகத்தில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்கலைக் கழக அமைப்பாளராக செ.க.ஆதித்யா லினார்டோ டாவின்சி நியமிக்கப்பட்டார். இதில் 10க்கும் மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திராவிடர் கழகம்

இதனை  தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் திராவிட மாணவர் கழக சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாநிலக் கல்லூரி தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்த கு.பா.ஈஸ்வர் மூர்த்தி, சிறீ மோஹித், கலைச்செல்வன், திராவிட மாணவர் கழக ஆதித்யா லினார்டோ டாவின்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

மேற்கண்ட மாணவர் சந்திப்பு நிகழ்வுகளில் திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நாகை மு. இளமாறன், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா, மாநில திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி அமைப்பாளர் ம.பூவரசன், வடசென்னை மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய், திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர் ப.வெங்கடேஷ் ஆகியோர் ஈடுபட்டனர். பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளில் திராவிட மாணவர் கழகம் கட்டமைப்பை ஏற்படுத்தியும், மேலும் தந்தை பெரியார் ஒருவர் தான் பெரியார், திராவிட மாணவர் கழகம் – திராவிடர் கழகத்தின் இலக்கு, செயல்பாடுகள், மாணவர்களின் கல்வி உரிமை சார்ந்த பிரச்சனைகள், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு, திராவிடம் – ஆரியம், 2026இல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட பலவற்றை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *