தமிழ்நாட்டின் 3 மாவட்டங்களில் வானிலை பலூன்கள் வளிமண்டல ஆய்வை தீவிரப்படுத்தும் வானிலை ஆய்வு மய்யம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 8- இந்திய வானிலை ஆய்வு மய்யம், துல்லிய மான வானிலை முன்னறிவிப்பு களை வழங்குவதற் காகத் தனது உள்கட்டமைப்பைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ் நாட்டில் சேலம், கோவை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் அய்ட்ரஜன் பலூன்களைப் பறக்கவிட்டு வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் புதிய அலுவலகங் களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வானிலை மாற்றங்களைக் கண்காணிக்கவும், பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

அய்ட்ரஜன் பலூன்களில் நவீன சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டு வளிமண்டலத்திற்கு அனுப்பப்படும்.

இந்த பலூன்கள் வானில் சுமார் 30 கிலோமீட்டர் உயரம் வரை செல்லும் திறன் கொண்டவை.

வளிமண்டல அழுத்தம், வெப்பநிலை, காற்றின் வேகம், திசை மற்றும் ஈரப்பதம் போன்ற முக்கியத் தரவுகளை இவை துல்லியமாகச் சேகரிக்கும். தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் இந்தப் பலூன்கள் பறக்கவிடப்படும்.

அய்ட்ரஜன் பலூன்களின் பயன்பாடு ஏன்?

வானிலை ஆய்வுக்கு ஹீலியத்திற்குப் பதிலாக அய்ட்ரஜன் பயன்படுத்தப்படுவதற்குக் குறிப்பிட்ட காரணங்கள் உள்ளன:

ஹீலியம் வாயுவை விட அய்ட்ரஜன் மிகவும் மலிவானது. இதன் அடர்த்தி குறைவு என்பதால் எளிதாக அதிக உயரத்தை எட்ட முடிகிறது. சவ்வு வழியாகக் கசியும் வீதம் குறைவு என்பதால், அதிக உயரத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று தரவுகளை வழங்கும்.

தற்போது இந்த அலுவலகங்களை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இடம் தேர்வு செய்யப்பட்ட வுடன் இந்திய வானிலை ஆய்வு மய்யத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கட்டு மானப் பணிகள் தொடங்கும். முதற் கட்டமாக, சேலம் மாவட்டத்தில் இதற்கான அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்தத் தரவுகள் மூலம் புயல் கணிப்பு, வான்வழிப் போக்கு வரத்து பாதுகாப்பு, விவசாய ஆலோசனைகள் மற்றும் கால நிலை மாற்ற ஆய்வுகள் பல மடங்கு துல்லியமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *