சென்னையில் பன்னாட்டு கைவினை, கைத்தறி, உணவுத் திருவிழா – ஏப்ரல் 29 இல் தொடக்கம்

1 Min Read

சென்னை, ஏப். 25- தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னையில் வருகிற 29ஆம் தேதி முதல் மே 14ஆம் தேதி வரை சென்னை விழா நடக்கிறது. இந்த சென்னை விழாவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி வகைகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை இடம் பெறுகிறது.

இதில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் பங்கேற்கிறார்கள்.ரூ.1.50 கோடி செல வில் மிக பிரமாண்டமாக இந்த சென்னை விழா நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக சுற்றுலாத் துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:- “சென்னை விழா”வில் நடைபெறும் கண்காட்சியில் வங் காள தேசம், பூடான், ஈரான், நேபா ளம், நைஜீரியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கிர்கிஸ்தான், உகாண்டா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த கைவினைஞர்கள் தங்கள் சொந்த நாட்டு கைவினைப் பொருட்களை காட்சிப் படுத்துவார்கள். இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் கைவினைப் பொருட்களை 80 அரங்குகளில் வைத்திருப் பார்கள். தமிழ்நாட்டில் இருந்து 70 அரங்குகள் இடம் பெறுகின்றன.

தமிழ்நாட்டில் புவியியல் குறி யீடு பெற்ற பொருட்களும் இங்கு முன்னிலைப் படுத்தப்படும். சில தயாரிப்புகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது தொடர்பாக வும் கண்காட்சியில் செய்து காட் டப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *