கீழமை நீதிமன்றங்களில் மறு ஆணை வரும் வரை இ-ஃபைலிங் முறை நிறுத்திவைப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 7– கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், பொங்கலுக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இ-ஃபைலிங் கட்டாயம் என்பதை கைவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ), தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (6.1.2026) விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்குரைஞர்கள் சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன், வழக்குரைஞர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.கிருஷ்ணகுமார், என்.மாரப்பன் ஆகியோர், “இ-ஃபைலிங் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வழக்கமான முறையில் நேரடியாக வழக்குகளை தாக்கல் செய்வதற்கு தடை விதிக்கக் கூடாது. இந்த சிக்கல்கள் தீரும்வரை இரண்டு முறையிலும் வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக பொங்கலுக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில் தலைமை நீதிபதி உத்தரவின்படி மறு உத்தரவு வரும்வரை தமிழ்நாடு முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் எஸ்.அல்லி தெரிவித்துள்ளார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *