செய்திச் சுருக்கம்

1 Min Read

தேர்வுகளுக்கு

ஒன்றிய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தகவல்.

அபராதம்

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த இரண்டரை மாதங்களில் 10,134 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து மாநகர போக்கு வரத்து காவல்துறையினர் அபராதமாக ரூ.10.48 கோடி வசூலித்துள்ளனர்.

விதிமுறைகள்

ஆன்லைன் விளையாட்டு – புதிய விதிமுறைகள் குறித்து அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

மழை

தமிழ்நாட்டில் நேற்று 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்துள்ள நிலையில் ஈரோடு, கரூரில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

தங்குமிடம்

சென்னையில் வீடு இல்லாமல் தெருவோரம் தங்கி இருப்பவர்களுக்கு 35 நவீன தங்குமிடங்களை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

நன்கொடை

கடந்த 2021-2022ஆம் ஆண்டில் 26 மாநில கட்சிகள் ரூ.186 கோடியை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள தாக தேர்தல் சீர்திருத்த ஆலோசனைக் குழுவான ஏடிஆர் தன்னார்வ அமைப்பு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

போலி மருந்துவர்கள்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 18 நாள்களில் அதிரடி நடவடிக்கை எடுத்து 103 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கை தொடர்கிறது என காவல் துறை இயக்குநர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *