இந்நாள் – அந்நாள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மாவீரன் மாயவரம் சி. நடராசன் பிறப்பு (7.1.1902)

மாயவரம் நடராசன் என்ற  பெயர் திராவிடர் இயக்கத்தின் வரலாற்றில் அழியா இடம் பெற்ற பெயராகும்.

வசதி படைத்த குடும்பத்தில் பிறந்திட்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பின், தந்தை பெரியாரின் இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர், பெரியாரிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார்.

தந்தை பெரியார் எதிர்கொண்ட கடும் எதிர்ப்புகளுக்கிடையேயான பணியில், பெரியாரை பாதுகாக்கும் பெரும் பொறுப்பேற்று – மெய்க்காப்பாளராக – கூட்டங்களில் கலவரம் செய்யும் காலிகளை விரட்டி அடிக்கும் வீரராக – பெரியார் செல்லும் இடங்களுக்கு முன்பே சென்று களம்காக்கும் சிப்பாயாக இருந்தவர் மாயவரம் நடராசன் ஆவார்.

இவர் சிறந்த எழுத்தாளருமாவார். ‘வெற்றிமுரசு’ எனும் இதழைத் தொடங்கி நடத்தியவர். தந்தை பெரியாருடன் கீழை நாட்டுப் பயணம் சென்றவர்.

இயக்கத் தலைமையை உயிரைப்போல் போற்றியவர். கட்டுப்பாடுமிக்க இவரைப் போல் உழைக்க வெகு சிலரே உளர்.

மாயவரம் நடராசன் மறைந்தபோது ‘சுயமரியாதை இயக்கத்தில் அவருடைய இடத்தை பூர்த்தி செய்கிற மாதிரி ஒருவரும் வரவில்லை’’ என்று தந்தை பெரியார் கூறினார்.

‘தலைவரால் என்ன உத்தரவு பிறப்பிக்கப்படு கிறதோ அதன்படி படையை நடத்திய தளபதி’’ என்று குடிஅரசு வீரவணக்கம் செலுத்தியது.

வாழ்க மாயவரம் நடராசன்.

இன்று அவருடைய பிறந்த நாள் (7.1.1902)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *