‘தமிழ்நாட்டின் தன்னுரிமை’க்காக நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி கனிமொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.6- தனது பிறந்த நாளையொட்டி (5.1.2026) திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார் பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள பதிவில், “பெண்ணுரிமைக்காகவும் தமிழ்நாட்டின் தன்னுரிமைக்காவும் நாடாளுமன்றத்தில் முழங்கும் கர்ஜனை மொழி – என் பாசத்திற்குரிய தங்கை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் – நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!”இவ்வாறு தெரிவித்தார்.

அதே போல் காதர் மொகிதீனுக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் – நம் அனைவரின் மரியாதைக்குரிய ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் காதர் மொகிதீனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பத்திரிகையாளர், பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலநிலைகளிலும் சமூகத்துக்குப் பங்களித்து, மதநல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் தாங்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ விழைகிறேன்.’இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அதில், “மதச் சார்பின் மையை நிலைநிறுத்தி, மாநிலம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதி செய்துள்ளீர்கள். அணுகுமுறை, அரசியல மைப்பு விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் தொடர்ந்து  வலுப் படுத்தட்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *