சென்னை, ஜன.6 மானிய விலை யில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட் டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (ஜன. 5) தொடக்கி வைத்தார்.
சென்னை, தீவுத்திடல் வளாகத் தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (GIG) தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலை யில் இ-ஸ்கூட்டர்கள் (e-scooter) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (5.1.2026) கொடி யசைத்து தொடக்கி வைத்தார்.
மேலும், வருவாய் துறையில் பணிபுரியும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலர்கள், சார் ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 13 கோடியே 73 லட்சத்து ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 155 புதிய வாகனங்களை (Mahindra Bolero B4 AC BS-VI) வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி யசைத்து தொடக்கி வைத்தார்.
