மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் ஆன்மிகப் பயணம்
தலைநகர் டில்லியில் 42 டிகிரி வெயிலில் மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றமே குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது முதல் தகவல் அறிக்கை ஏன்பதியவில்லை என்று டில்லி காவல்துறையைக் கேள்வி கேட்டுள்ளது. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினரோ எவ்வித கவலையும் இன்றி ஹெலிகாப்டரில் ஆன்மிக யாத்திரை சென்று கொண்டு இருக்கிறார்.