சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் 234 மாவட்ட செயலாளர்கள் நியமனம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தொல். திருருமாவளவன் அறிவிப்பு

சென்னை, ஜன.5 சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் வி.சி.க.வில் 234 மாவட்ட செய லாளர்களை அக்கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் நிய மித்துள்ளார்.

234 மாவட்ட செயலாளர்கள்

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்சி யின் உள்கட்டமைப்புகளை பலப்ப டுத்தும் நடவடிக்கைகளில் வி.சி.க. ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் நாடாளுமன்ற தொகுதிகளின் அடிப்படையில் 39 மண்டல செயலாளர்களை திருமாவளவன் அறிவித்தார். மேலும் அடுத்தக்கட்டமாக மாவட்ட செயலாளர்கள் அறி விக்கப்படுவார்கள் என தெரிவித்தார். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மாவட்டக் கட்டமைப்பு என்பது மிகவும் முக்கியமானது. தமிழ்நாட்டில்  வருவாய் மாவட்டங்கள் 38 இருந்தபோதும், கட்சிகள் அவர்க ளின் நிர்வாக வசதிக்காகப் பல மாவட்டங்களாகப் பிரித்து நிர்வாகிகளை நியமித்துள்ளனர். வி.சி.க.வில் இதுவரை, 144 பேர் மாவட்டச் செயலாளர்களாகப் பதவி வகித்தனர். இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒருவர் மற்றும் கூடுதலாக மாநகர, ஒன்றிய, வட்ட அளவில் என மொத்தமாக 144 பேர் மாவட்டச் செயலாளர்களாக இருந்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் சட்டப்பேரவை தொகுதிகளின் அடிப்படையில் 234 மாவட்ட செயலாளர்களை வி.சி.க. தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு சி.சவுந்தர், ராயபுரம் தொகுதிக்கு சிவ பேரறிவாளன், பெரம்பூர் நா.உஷாராணி, திருவிக நகர் புரசை அன்பழகன் உட்பட தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் மாவட்டச் செயலாளர்கள் அறி விக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *