பித்தப்பைக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று பித்தப்பை. இது கல்லீரலுக்கு கீழே அமைந் துள்ள ஒரு சிறிய பை ஆகும். இந்தப் பை கல்லீரல் வெளியிடும் பித்த நீரை சேமித்து வைக்கிறது. உணவுகளை செரிப்பதற்கு பித்த நீர் உதவுகிறது. இந்த பித்த நீரில் இருக்கும் கொழுப்புகள் மற்றும் பிற பொருட்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது அது ஒரு கட்டத்தில் பித்தக் கற்களை உருவாக்குகிறது. இந்தப் பித்தக் கற்கள் பித்தப் பையில் அடைப்பை ஏற்படுத்தும்போது பித்தப்பை தாக்குதல் ஏற்படுகிறது.

மருத்துவம்

இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கு அல்ட்ரா சவுண்ட் போன்ற பரிசோதனைகள் மூலம் எந்த அறிகுறியும் இல்லாமலேயே பித்தப் பையில் கற்கள் இருப்பதை அறிந்து கொள்ள முடியும். பித்தப் பையில் கற்கள் எப்படி உருவாகிறது. அதற்கு எப்போது மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

பித்தப் பையில் கற்கள் உருவாவது எப்படி?

பித்தப்பை (Gall Bladder) என்பது வயிற்றின் வலது பக்கத்தில் கல்லீரலின் கீழே இருக்கும். தினமும் ஒரு லிட்டர் பித்தநீர் கல்லீரலில் உற்பத்தியாகிறது. இந்த பித்தநீர் அடர்த்தியாகி பித்தப் பையில் தேங்குகிறது. கொழுப்புச் சத்தைத் தேவையான அளவுக்கு உணவுடன் சேர்த்துக் கொள்ளாவிட்டால் பித்தநீர் பித்தப் பையில் தங்கிவிடுகிறது. இது கற்கள் உருவாக ஏதுவாகிறது.

இரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பு இருப்பது பித்தப்பை கற்களுக்கு முக்கியக் காரணமாகும். உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி போன்ற பொதுவான கோளாறுகளும் பித்தப்பை கற்களுக்கான காரணங்களில் அடங்கும். கல்லீரல் தயாரிக்கும் பித்தச்சாறு பித்தப் பையில் சேமிக்கப்படுகிறது. நாம் உணவு சாப்பிடும்போது குறிப்பாக கொழுப்பு உணவுகளை ஜீரணிக்க இந்தப் பித்தச் சாறு குடலுக்குள் வெளியேறும்.

பித்தச் சாற்றில் உள்ள கொழுப்பு அல்லது பித்த உப்புகள் உறைந்து கற்களாக மாறுவதையே பித்தப்பை கற்கள் (Gall Stones) என்கிறோம். இந்தக் கற்கள் மணற்கணியில் இருந்து பெரிய கல்லளவு வரை இருக்கலாம். ஒரே கல்லாகவும், பல கற்களாகவும் இருக்க முடியும்.

பித்தப்பைக் கற்கள் மனிதர் களுக்கு பல நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. மருத்துவ அறிவியல் வளர்ந்த பிறகு தான் அல்ட்ரா சவுண்ட், ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மூலம் இவை எளிதாக கண்டு பிடிக்கப்படுகின்றன. பழைய காலங்களில் கடுமையான வலி அல்லது தொற்று ஏற்பட்ட பிறகே நோய் கண்டறியப்பட்டது. பித்தப் பைக் கற்கள் உருவாவதற்கு பல காரணங்கள் உள்ளன.

  • பித்தச்சாற்றில் அதிகமான கொழுப்பு.
  • பித்தப்பை முழுவதுமாக காலியாகாமல் இருந்தால்.
  • வயது அதிகரிப்பு.
  • பெண்களுக்கு ஆண்களை விட அதிகமாக பித்தப்பையில் கற்கள் உருவாகுதல்.
  • கர்ப்பகாலம், ஹார்மோன் மாற்றங்கள்
  • உடல் பருமன், உடற்பயிற்சி குறைவு
  • திடீர் எடை குறைப்பு
  • நீரிழிவு (Diabetes) போன்ற நோய்கள்

 பித்தப்பைக் கற்களின் அறிகுறிகள் என்ன?

பலருக்கு எந்த அறிகுறியும் இருக்காது.  ஆனால் சிலருக்கு வயிற்றின் வலது பக்கத்தில் அல்லது மேல்பகுதியில் வலி ஏற்படும்.

  • அந்த வலி முதுகு அல்லது வலது தோள் பட்டைக்கு பரவும்.
  • உணவு, குறிப்பாக எண்ணெய், கொழுப்பு உணவுக்குப் பிறகு வலி அதிகரிக்கும்.
  • வாந்தி, குமட்டல் ஏற்படும்.
  • சில நேரங்களில் காய்ச்சல் வரும்.

அறிகுறி இல்லாத பித்தப்பைக் கற்கள்
(Asymptomatic Gallstones)

இன்றைய காலத்தில், “ மெடிக்கல் ஹெல்த் செக்கப்” செய்யும்போது அல்ட்ரா சவுண்ட் மூலம் பலருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பது தற்செயலாக (Incidental finding) தெரிய வருகிறது. இவர்களுக்கு எந்த வலியும், தொந்தரவும் இருக்காது.

முக்கியமான விசயம்: அறிகுறி இல்லாத பித்தப்பைக் கற்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவையில்லை. ஏனெனில்:

  • பலருக்கு வாழ்நாள் முழுவதும் எந்த பிரச்சினையும் வராமல் இருக்கலாம்
  • தேவையற்ற அறுவை சிகிச்சையை தவிர்க்கலாம்
  • வழக்கமான மருத்துவ கண்காணிப்பு போதுமானது. மருத்துவர் ஆலோசனை யுடன் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும்.

பித்தப்பைக் கற்களின் சிக்கல்கள் (Complications)

சில நேரங்களில் கற்கள் பிரச்சினைகளை உண்டாக்கலாம்:

  • பித்தப்பை அழற்சி (Cholecystitis) – கடுமையான வலி, காய்ச்சல்
  • பித்தக்குழாய் அடைப்பு – மஞ்சள் காமாலை (Jaundice)
  • அக்னாஷய அழற்சி (Pancreatitis) – கடுமையான வயிற்று வலி
  • தொற்று (Infection)

இந்த நிலைகளில் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.

 எப்போது பித்தப்பைக் கற்களுக்கு
அறுவை சிகிச்சை தேவை?

பின்வரும் சூழ்நிலைகளில் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது:

  • அடிக்கடி வயிற்று வலி
  • பித்தப்பை அழற்சி
  • பித்தக்குழாய் அடைப்பு
  • பிற சிக்கல்கள் ஏற்பட்டால்

அறிகுறி இல்லாதவர்களுக்கு, பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவையில்லை.

பித்தப்பை இல்லாமல் சாதாரண வாழ்க்கை நடத்த முடியுமா?

ஆம். பித்தப்பை அகற்றப்பட்ட பிறகும் மனிதன் சாதாரண வாழ்க்கை நடத்த முடியும். கல்லீரல் தொடர்ந்து பித்தச்சாற்றை உற்பத்தி செய்யும்; அது நேரடியாக குடலுக்குள் செல்லும். ஆரம்பத்தில் சிலருக்கு சிறிய ஜீரண மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் உடல் பழகிவிடும்.

லேபராஸ்கோப்பிக் கொலிசிஸ்டெக்டமி
(Laparoscopic Cholecystectomy)

இன்றைய காலத்தில் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை பெரும்பாலும் லேபராஸ்கோப்பி முறையில் செய்யப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள்:

  • சிறிய துளைகள் மட்டுமே
  • வலி குறைவு
  • ரத்த இழப்பு குறைவு
  • விரைவான குணமடைதல்
  • 1–2 நாட்களில் வீட்டிற்கு செல்லலாம்

இந்த அறுவை சிகிச்சை எவ்வளவு பாதுகாப்பானது?

அனுபவமுள்ள அறுவை மருத்துவர் செய்தால் இது மிகவும் பாதுகாப்பான சிகிச்சை. சிக்கல்கள் அரிதாகவே ஏற்படும். பெரும்பாலான மருத்துவப் பயனாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு என்ன எதிர்பார்க்கலாம்?

  • ஆரம்ப நாட்களில் லேசான வயிற்று வலி ஏற்படலாம்.
  • மென்மையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • 1–2 வாரங்களில் இயல்பான செயல்கள் செய்யலாம்.
  • மருத்துவர் கூறும் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

 பித்தப்பைக் கற்களைத் தடுப்பது எப்படி?

  • சமநிலையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதிக எண்ணெய், கொழுப்பு உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • எளிதான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
  • உடல் எடையை கட்டுப்படுத்துதலில் ஆர்வம் காட்ட வேண்டும்.
  • திடீர் எடை குறைப்பை தவிர்க்க வேண்டும்.
  • பித்தப்பைக் கற்கள் பொதுவானவை.
  • அறிகுறி இல்லாத கற்களுக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவையில்லை
  • வலி அல்லது சிக்கல்கள் இருந்தால் மட்டுமே சிகிச்சை அவசியம்.
  • பித்தப்பை அகற்றிய பிறகும் சாதாரண வாழ்க்கையை நடத்த முடியும்.
  • புரிந்து கொண்டு சரியான நேரத்தில் சரியான மருத்துவ ஆலோசனை எடுப்பதே முக்கியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *