சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் ஆசிரியர்களையும் கைவிட மாட்டோம் கல்வி அமைச்சர் மகேஷ் உறுதி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.4  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்லமுடிவு எடுப்போம் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.

‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதிமுதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில், 9-ஆவது நாளாக கல்வித்துறை தலை மையகமான டிபிஅய் வளாகத்தில் நேற்று (3.1.2026) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

போராட்டம் குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ‘‘சமவேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகிறோம். கடந்த தேர்தலின்போது எங்கள் கோரிக்கையை ஏற்ற தி.மு.க., அதை தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தது. ஆனால், இன்னும் நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடு களையப்படாவிட்டால், பள்ளிகள் திறந்த பிறகும் போராட்டம் தொடரும். தமிழ்நாடு அரசு எங்களை அழைத்துப் பேசிகோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

விரைவில் நல்ல முடிவு

 இந்நிலையில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று (3.1.2026)செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தொடர் போராட்டத்தில் ஈடு பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் என் குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம். நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். போராட்டம் நடத்துபவர்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆசிரியர்களின் செயலை போராட்டமாகவோ, ஆர்ப்பாட்ட மாகவோ நான் பார்க்கவில்லை. தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *