சென்னை, ஜன.4 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய ‘திராவிட மாடல்’ அரசு!
நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போ துமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.
திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்! தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!
இவ்வாறு அவர் கூறினார்.
49ஆவது சென்னை புத்தகக் காட்சியில்
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின்
பற்றிய புத்தகம்!
சென்னை, ஜன.4 சென்னை நந்தனத்தில் ஜன.8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறும் 49-வது சென்னை புத்தகக் காட்சியில் ‘கீழைக்காற்று’ பதிப்பகம் சார்பில் “திருப்பரங்குன்றம் விவகாரம் -ஜி.ஆர்.சுவாமிநாதன்:நீதி பதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?” என்ற தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.
அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில், நீதிபதி ஒரு கையில் சூலத்தையும், மறு கையில் காவிக் கொடியையும் ஏந்தியிருப்பது போன்ற சித்திரம் இடம் பெற்றுள்ளது.
