கோயிலா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? கன்னியாகுமரியில் கோவில் விழாவில் ‘வீரசாவர்க்கருக்கு ஜே’ போட்ட பா.ஜ.க.வினர்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாகர்கோவில், ஜன.4– சுசீந்திரம் கோயில் விழாவை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அந்த வகையில், அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு மற்றும் மனோ தங்கராஜ் மற்றும் பிற அரசு அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது, அங்கிருந்த பா.ஜ.க.வினர் திடீரென ‘‘வீர சாவர்க்கருக்கு ஜே’’ என்று முழக்க மிட்டனர். இது பக்தர்களிடையேயும், அங்கிருந்த மற்ற கட்சியினரிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அமைச்சர்களின் கண்டனம்

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மிகவும் கடுமையாக எதிர்வினையாற்றினார். பக்தர்களின் உணர்வுகள்: ஆன்மிக நிகழ்ச்சியான தேரோட்டத்தில் அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய நபர்களின் பெயர்க ளைக் கூவுவது, ‘சாமி தரிசனம்’  செய்ய வந்த பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல் என்று அவர் குறிப்பிட்டார்.

‘‘காந்தியார் படுகொலையில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஒருவரின் பெயரை, கோயில் விழா வில் முழங்குவது தேச விரோதச் செயல்’’ என்று சாடினார்.

அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, கோயில் விழாக்களில் வேண்டுமென்றே அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயல்வதாகக் குற்றம் சாட்டி னார்.

சுசீந்திரம் கோயிலுக்கும், சாவர்க்க ருக்கும் என்ன சம்பந்தம்? – இது ஒரு வழிபாட்டுத் தலம், அரசியல் மேடை அல்ல. விழாவின் ‘புனிதம்’ கெடும் வகையில் பா.ஜ.க.வினர் திட்டமிட்டு செயல்படுவதாகக் கூறப்பட்டது.

இந்தச் சம்பவம் சமூக வலை தளங்களிலும் கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இது போன்ற அரசியல் முழக்கங்கள் கோயில்களில் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *