செய்திச் சுருக்கம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை உள்ளிட்ட பகுதிகளில், 2026ஆம் ஆண்டின் முதல் நாளில் பெய்த மழையால் புழல் ஏரி 100 சதவீதம் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோ குளோபுலின் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைத்திருப்பது கட்டாயம் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

சிவகாசியில் நடப்பாண்டு ரூ.450 கோடிக்கு மேல் காலண்டர் விற்பனை நடந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இணைய வழி விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வின்சோ நிறுவனம் வாடிக்கையாளர்களின் ரூ.43 கோடியை முடக்கி, அமெரிக்க வங்கிக் கணக்கில் ரூ.489 கோடியை மறைத்து வைத்திருந்தது தொடர்பாக ரூ.505 கோடி பத்திரங்கள் முடக்கி அமலாக்கத்துறை வின்சோ நிறுவனர்கள் சவுமியா சிங்ரத்தோர், பவன் நந்தா ஆகியோரை கைது செய்தது. மேலும், இந்த வழக்கில் வின்சோ நிறுவனத்தின் ரூ.192 கோடியை முடக்கி உள்ளது.

திருமணமான பெண் தன் கர்ப்பத்தைத் தொடர வேண்டுமா அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டுமா என சுயமாக முடிவெடுக்கலாம். அவருடைய விருப்பமும் சம்மதமும் மட்டுமே முக்கியம் என பஞ்சாப் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் முதல் புல்லட் ரயிலுக்கான பயணச்சீட்டு விற்பனை 2027 ஆகஸ்ட் 15ஆம் தேதி வாங்கலாம். மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தொலைவுக்கு உலகத் தரம் வாய்ந்த நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடக்கிறது. சூரத் முதல் பில்மோரா வரையிலான 47 கி.மீ. தூரத்திற்கு பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *