“மக்களைத் தேடி மேயர்” திட்டம் சென்னையில் அமல்

2 Min Read

அரசியல்

சென்னை, ஏப். 26-  மக்களைத் தேடி மேயர் திட்டம் வரும் மே 3ஆம் தேதி தொடங்கப் படவுள்ளது. வட சென்னை பகுதியில் மக்களிடம் மனுக் களை பெறுகிறார் சென்னை மேயர் பிரியா. 

சென்னை மாநக ராட்சியில், பொதுமக்க ளிடம் 1913 தொலைப்பேசி எண், நம்ம சென்னை செயலி, அஞ்சல்கள் வாயிலாக புகார்கள் பெறப் பட்டு நடவடிக்கை எடுக் கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பார்வையா ளர்கள் நேரம் ஒதுக்கப் பட்டு, பொதுமக்களிடம் மேயர் முதல் அதிகாரிகள் வரை மனுக்களை பெறு கின்றனர். அதேநேரம், பலநேரங்களில் மேயர், அதிகாரிகள் மற்ற நிகழ்ச் சிகள், ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்ப தால், அவர்களை சந்திப் பது பொதுமக்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 2023-2024ஆம் பட்ஜெட் கூட்டத்தொடரில், ‘மக்க ளைத் தேடி மேயர் திட் டம்’ செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்தார். அந்தத் திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவ டிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதன்படி, வரும் மே 3ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடங்கப்பட வுள்ளது. 

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதற்கட்டமாக “மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ், வடக்கு வட்டார துணை ஆணை யாளர் அலுவலகத்தில் மே 3ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நட வடிக்கை மேற்கொள்ள உள்ளார். வடக்கு வட்டாரத்தில் ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப் பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்து வரி மற்றும் தொழில்வரி, குப்பைகள் அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளை யாட்டுத் திடல் உள் ளிட்ட மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி கள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக அளிக்கலாம்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *