தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஜி.ஆர்.சாமிநாதன் மீதான பதவி நீக்க தீர்மானம் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 3- தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் பங் கெடுப்பதும், சங்பரிவார் சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிவருவதோடு மட்டுமின்றி, தமிழ் நாட்டின் அமைதியை கெடுக்கும் வகையிலும், சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும்  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் வழக்கத்திற்கு மாறான இடத்தில் தீபம் ஏற்ற சமூக பதட்டத்தை உருவாக்கும் வகையில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது 108 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவந்த Impeachment motion – பதவி நீக்க கோரும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற அவைத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மேற்படி ஜி.ஆர்.சுவாமிநாதனை வேறு ஒரு உயர் நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்யக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கையெழுத்து இயக்கம் 2.01.2026 அன்று தொடங்கப்பட்டது

இதில் பல்வேறு வழக்கு ரைஞர்கள் கையெழுத்திட்டு வருகிறார்கள்,

அதன் ஒரு பகுதியாக சமத்துவ வழக்குரைஞர் சங்க மாநில தலைவர் பார்வேந்தன் தலைமையில் பலர் பங்கேற்று கையெழுத்திட்டனர் – கையெ ழுத்து இயக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது – கையெழுத்து இயக்கத்தில் வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், சுந்தரராஜன், திமுக மாணவர் கழக மாநில செயலாளர் வழக்குரைஞர்  ராஜீவ்காந்தி, சட்ட மாணவர்கள் ,நாகராஜ் மற்றும் பார்த்தீசுவரன் ஆகியோர் பங்கெடுத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *