சென்னை, ஜன.3 கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து, புதிய வாணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
மறுசீரமைப்பு
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்த உயர்மட்டக் குழு பல்வேறு கட்டங்களாக நடத்திய ஆலோசனைகள் மற்றும் விவாதங்களின் அடிப்படையில், நிர்வாக வசதிக்காக ரிஷிவந்தியம் ஒன்றியத்தைப் பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
புதிய சீரமைப்பின்படி, தற்போதுள்ள ஊராட்சிகள் பின்வருமாறு பிரிக்கப்பட் டுள்ளன:
வாணாபுரம் ஒன்றியம்: புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒன்றியத் தில் 38 கிராம ஊராட்சிகள் இணைக்கப் பட்டுள்ளன.
ரிஷிவந்தியம் ஒன்றியம்: எஞ்சியுள்ள 22 கிராம ஊராட்சிகள் ரிஷிவந்தியம் ஒன்றியத்தின் கீழ் செயல்படும்.
இந்த புதிய ஒன்றிய உருவாக்கம் தொடர்பான முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு, இது குறித்து பொதுமக்களின் கருத்துகளை வரவேற்றுள்ளது. வாணாபுரம் ஒன்றியம் உருவாக்கம் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துகள் இருந்தால், பொதுமக்கள் அடுத்த ஆறு வார காலத்திற்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பின் மூலம், அப்பகுதி மக்களுக்கு அரசுத் திட்டங்கள் விரைவாகச் சென்றடைவதோடு, நிர்வாக ரீதியிலான செயல்பாடுகளும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
