சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாட்டிற்கு சென்ற தமிழர் தலைவருக்கு மும்பை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மும்பையில் இன்று (3.1.2026) தொடங்கவுள்ள இரண்டு நாள் சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு  விழா  –  மாநாட்டுக்காக, மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்தில் காலை 11:00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வருகை தந்தார். கழகத் தலைவருக்கு மாநாட்டுப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் பயனாடை அணிவித்தனர்.  மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ.இரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில், லெமூரியா அறக்கட்டளை நிறுவனர் – மும்பை சு.குமணராசன், மும்பை  கழகத் துணைத் தலைவர் இ.அந்தோணி, மும்பை  கழகச் செயலாளர் ஜெ.வில்சன், சோ.ஆசைத்தம்பி, சிவக்குமார் சுந்தர்ராஜன், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன்,  கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், மா.தயாளன், மாறன் ஆரிய சங்காரன், பெரியார் பாலா, மும்பை புறநகர் தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் அலிசேக் மீரான், மும்பை தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் மா.சேசுராசு, கவிஞர் வ.இரா.தமிழ் நேசன், இளங்கோ அப்பாதுரை, ஆரே காலனி பாண்டு, ஆ.கண்ணன், மு.கணேசன், காரை கரு.ரவீந்திரன், பூ.சு.அழகுராஜா, கி.அறிவுமலர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உடன் வருகை தந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *