திருப்பாவை… திருவெம்பாவையா? இல்லை… இது பெண்ணியப் பாவை!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மானாய் மயிலாய்

மடப்பிடியாய்

மாங்குயிலாயத்

தேனாய் நறவாய்ச்

சிலையாய்த் திறள்கனியாய்

ஊனாய் உடலாய்

உனைவேட்கும்

ஆண்வலையில்

தானாய்நீ வீழச்

சதிவளர்த்தார் பெண்ணேகேள்!

கூனாய் உனதுரிமை

குன்றிவிட ஆணுருமை

வானாய்க் கதிராய்

வளர்த்தார்உன் மேனிமிசை!

மீனாய் வலைப்படலை

விட்டினியுன் மெய்யுணர்வின்

பானாய்வாய்= வையாமற்

பார்த்தேலோ ரெம்பாவாய்!

 

பெண்வெளியே வந்தால்

பெயல்வாராய் ரெம்பாவாய்

கண்வெளியே முத்திக்

கழன்றோட வாய்வழிவார்

நுண்வெளிகள் ஆடிவழி

நோக்களிக்கும் பெட்டிமுன்னே

பண்வெளியில் பெண்ணிடையின்

பாவாடை பட்டிகைகள்

கிண்ணென்று போர்த்தும்

கிளர்செழுமை பாட்டாக்கி

வண்ணத் திரையில்

வழியும் வருணனைகள்!

எண்ணம் இருட்டாம்;

இரைநீ! இறைஆணாம்!

மொண்ணைப் பண்பாட்டை

முறிக்கேலோ ரெம்பாவாய்!

ஆணினதி காரம்

அடல்நீண்டும் உன்காயம்!

நாணிக்கோ ணும்உன்

நலமவர்க்கு வெங்காயம்!

சாணித் தெளித்துத்

தரைபெருக்கிக் கோலமிட

ஆணி அடித்தே

அடுக்களையில் ஆண்சுவைக்கே

பாணி சமையல்

பலவகைகள் செய்தளித்தும்

ஊணின்மேல் ஆசை

ஒருவி இடைமெலியக்

காணிரவில் ஆடை

களைந்திடவோ வாழ்வுனதே!

மாணிழப்பை மாற்றி

மலர்ந்தேலோ ரெம்பாவாய்!

 

பண்ணியமாய் உன்னைப்

பதங்காணும் ஆடவரை

பெண்ணியத்தைக் கண்டால்

பிதற்றிக் குரைக்கின்றான்!

கண்ணியமும் பண்பாடும்

காணலையாம், பெண்ணுக்குப்

புண்ணியமே சேர்க்கும்

புருசனடி என்கின்றான்

“அண்ணி கொழுந்தற்(கு)

அதிதெய்வம்” கொண்டவனோ

வண்ண மனையாளின்

வாரழகுத் தங்கையினை

எண்ணி மணப்பானாம்,

ஏய்க்கும் “கலாசாரம்”

விண்ணில் உதைக்க

விரைந்தேலோ ரெம்பாவாய்!

– கவிஞர் கண்ணிமை

(பானாய் – பால்காய்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *