ஆளுநர்கள் மசோதாக்களை கிடப்பில் போடக்கூடாது உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஏப். 26- மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறி உள்ளது.

தமிழ்நாடு, தெலங்கானா என பா.ஜ.க. அல்லாத எதிர்க் கட்சிகள் ஆளுகிற மாநிலங்க ளில், சட்டபேரவைகளில் நிறை வேற்றப்படுகிற மசோதாக்க ளுக்கு ஆளுநர்கள் விரைவான ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவது விவாதப்பொருளாகி உள்ளது.இதனால், மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் வழங்குவதற்கு ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில், கடந்த 10ஆம் தேதி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதேபோன்று, முதலமைச் சர் சந்திரசேகரராவ் தலைமை யில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆளுகிற தெலங்கானா மாநிலத்தில் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் கிடப்பில் போடுகிறார் என்ற புகார் எழுந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தெலுங்கானா அரசு வழக்கு போட்டது. அந்த வழக்கில், “தெலங்கானா சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட் டுள்ள 10 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார்” எனவும், “மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவு எடுப்பதற்கு காலநிர்ணயம் செய்ய வேண் டும்” என்று கூறப்பட்டது. இந்த வழக்கு, உச்சநீதிமன்றத் தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நர சிம்மா ஆகியோரை கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தெலங் கானா மாநில அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடினார். அவர், “மசோதாக்களை ஆளுநர்கள் கிடப்பில் போடுகிற பிரச்சி னைக்கு உச்சநீதிமன்றம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அரசி யல் சாசனம் பிரிவு 200, மசோ தாக்களை ஆளுநர்கள் கிடப் பில் போடக்கூடாது என்று சொல்கிறது” என வாதிட்டார். அவரது வாதத்தை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொண்டது.

அதைத் தொடர்ந்து நீதி பதிகள் கூறியதாவது:- மாநிலங் களின் அரசியல் சாசன தலைமை (ஆளுநர்), அரசியல் சாசனத்தின் 200ஆ-வது பிரிவை மனதில் கொள்ள வேண்டும். ஒப்புதலுக்காக மசோதாக்கள் அனுப்பப்படுகிறபோது, அவற் றைக் கிடப்பில் போடக் கூடாது. தங்களுக்கு ஒப்புதல் இல்லாத மசோதாக்களை, சட்டபேரவையின் மறு ஆய் வுக்காக ஆளுநர்கள் கூடிய விரைவில், அதற்கான குறிப் புடன் திருப்பி அனுப்பி விட வேண்டும். ‘கூடிய விரைவில்’ என்று சொல்கிறபோது, அது குறிப்பிடத்தக்க ஓர் உள்ளடக் கத்தைக் கொண்டுள்ளது. இதை ஆளுநர்கள் மனதில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். அதே நேரத் தில் தெலங்கானா கவர்னரிடம் இருந்து கிடைத்துள்ள தகவல், அவரிடம் எந்த மசோதாவும் கிடப்பில் இல்லை என்று கூறு கிறது என ஆளுநர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா தெரிவித்தார். 

அதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட், “யாரையும் குறிப் பிட்டு நாங்கள் கருத்து கூற வில்லை. நீதிமன்றம் பொதுவாகத்தான் அரசியல் சாசன சட் டம் கூறி இருப்பதை சுட்டிக் காட்டுகிறது” என தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *