தமிழ்நாட்டில் புத்தாண்டில் பிறந்த 545 குழந்தைகள்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன

சென்னை, ஜன. 02- உலகம் முழுவதும் 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் தங்களது பிறந்தநாளையும், புத்தாண்டையும் ஒரே நாளில் கொண்டாடும் இரட்டிப்பு மகிழ்ச்சியைப் பெறுவார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜனவரி 1) மட்டும் சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.

இரட்டை பெண் குழந்தைகள்

மாவட்ட வாரியான பிறப்பு விவரங்கள்:புத்தாண்டு  நள்ளிரவு 12 மணி முதல் மாலை வரையிலான புள்ளிவிவரங்களின்படி, பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் பிறந்துள்ள விவரம் பின்வருமாறு:

சென்னை 46  கள்ளக்குறிச்சி 47 சேலம் 29 விழுப்புரம் 27 நெல்லை24 திருவண்ணாமலை 22 மதுரை 22 – தஞ்சை 22 செங்கல்பட்டு 20 திண்டுக்கல் 20 தென்காசி 20

சிறப்புத் தகவல்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் மட்டும் 21 குழந்தைகள் பிறந்தன. இதில் இரண்டு தாய்மார்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

மயிலாடுதுறையில் 16 குழந்தைகள்

கோவையில் 11, திருப்பூரில் 13, ஈரோட்டில் 12, கிருஷ்ணகிரியில் 15, தருமபுரியில் 13 மற்றும் நாமக்கல்லில் 10 குழந்தைகள் பிறந்துள்ளன.     டெல்டா மாவட்டங்கள்: மயிலாடுதுறையில் 16, நாகையில் 6 மற்றும் திருவாரூரில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

இதர மாவட்டங்கள்:

திருச்சியில் 13, வேலூரில் 8, கரூரில் 4 (அனைத்தும் ஆண் குழந்தைகள்), புதுக்கோட்டையில் 14 மற்றும் கடலூரில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த இந்த மழலைகளின் வருகையால், அந்தந்தக் குடும்பத்தினர் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *