பட்டுக்கோட்டை, ஜன. 2- பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 30.12.2025 அன்று மாலை 6 மணி அளவில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகத்தில் மாநில ஒருங்கி ணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார் தலைமையிலும், மாவட்ட கழக காப்பாளர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட கழக தலைவர் மல்லிகை வை. சிதம்பரம், மாவட்ட கழக செயலாளர் கா. தென்னவன் முன்னிலையிலும் மாவட்ட கழக இளைஞர் அணி தலைவர் சு.அரவிந்த் குமார் கடவுள் மறுப்பு கூறிட, மாவட்ட துணைத் தலைவர் முத்து துரைராஜ் அனைத்து கழகத் தோழர்களையும் வரவேற்று உரையாற்றினார்.
கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் இரத்தினசபாபதி, மாவட்ட செயலாளர் புலவஞ்சி இரா. காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீலகண்டன், மாவட்ட பகுத்தறி வாளர் கழக புரவலர் என். கே.ஆர்.நாராயணன், துணைத் தலைவர் மாணிக்க சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சோம. நீலகண்டன், மாவட்ட வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் அ. அண்ணாதுரை, முதுபெரும் பெரியார் பெருந் தொண்டார் அ. காளிதாசன், சேது பாவா சத்திரம் ஒன்றிய தலைவர் சி. செகநாதன், ஒன்றிய செயலாளர் ஆ.சண்முகவேல், மதுக்கூர் ஒன்றிய தலைவர் புலவஞ்சி பெ.அண்ணாதுரை, துணைத் தலைவர் நா.வை.ராதாகிருஷ்ணன், சிரமேல்குடி தொ. சமரன், கருப்பூர் சி. முருகேசன் காசாங் காடு து. பகுத்தறிவு பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி சி.ரெங்கசாமி, பாக்கியம் நகர் குமாரவேல் பேராவூரணி நகர தலைவர் சி. சந்திரமோகன் பட்டுக்கோட்டை நகர ப.க.தலைவர் செ அழகரசன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துகளைக் கூறினர்.
மாநிலக் கழக ஒருங்கிணைப்பா ளர் இரா.ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் அணுகுமுறைகள், போராட்ட குணங்கள் இவைகளை எடுத்து ரைத்து பொறுப்பேற்றுள்ள பொறுப் பாளர்கள் ஆசிரியர் அவர்களின் எண்ணம் நிறைவேறும் வகையில் உற்சாகமாக செயல்பட வாழ்த்துக்கள் தெரிவித்து உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பகுத்தறிவாளர் கழக மேனாள் பொறுப்பாளரும், பெரியார் பெருந்தொண்டருமான தஞ்சை இரத்தினகிரியின் மறைவுக்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வீரவணக்கம் செலுத்துகிறது.
16.12.2025 அன்று சென்னையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை முழு மனதுடன் ஏற்று செயல் படுத்துவது என இக்கூட்டம் ஒருமன மாக முடிவு செய்கிறது.
பட்டுக்கோட்டையில் கடந்த ஆண்டு நவம்பர் 27 அன்று நடைபெற்ற பெரியார் உலக நிதியளிப்பு விழாவிற்கு தாராளமாக நிதி உதவி வழங்கிய பெருந்தகையாளர்களுக்கு, இக் கூட்டம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தலைமைச் செயற்குழு தீர்மானங்களின்படி ஒன்றிய, நகர, கிளைக் கழக கலந்துரையாடல் கூட்டங்களையும், நான்கு ஒன்றியங் களிலும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது எனவும் இக்கூட்டம் ஒருமனதாக முடிவு செய்கின்றது.
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற பெரியார் உலக நிதியளிப்பு வரவு-செலவு விவரங் கள் சரிபார்க்கப்பட்டு கழகத் தோழர் களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
நகர கழக இளைஞர் அணி அமைப்பாளர் மா.குமாரவேல், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பகுத்தறிவு துரைராஜ் – ப.க. தோழர் மன்னங்காடு மா. சிவஞானம் நன்றி கூறினார்.
