உங்களை மறக்கவில்லை!

1 Min Read

அரசியல்

“நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகிற நேரத்தில், உச்சியிலிருந்து பாதம் வரையில் தொங்கக் கூடிய நல்லதோர் மலர் மாலையைத் தயாரித்து, நகர சபைக் கட்டடத்திற்கு எதிரிலேயே கவனிப்பாரற்று நிற்கின்ற – தமிழர்களைக் கை தூக்கிவிட்ட சர் தியாகராயர் சிலைக்கு அணிவித்து, அவரது பொன்னடிகளைத் தொழ வேண்டும். “மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத் திற்கு முதன் முதல் அறிவூட்டினீர்கள்; வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள்; உங்களது வழிவந்த நாங்கள், நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவதிப் பட்டோம். நீங்களாவது செல்வச்சீமான்; நாங்கள் பஞ்சைப் பராரிகள்! ஆனால் சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை!” – என்று வீர வணக்கம் செலுத்தி விட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன்”

அறிஞர் அண்ணா அவர்கள் 1959ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.கழகம் பெரு வெற்றி பெற்றபோது  கூறியது….

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *