உலக ஆயர்கள் மாமன்றத்தில் முதன் முதலாக பெண்களும் வாக்களிக்க அனுமதி போப் பிரான்சிஸ் அறிவிப்பு

Viduthalai
1 Min Read

அரசியல்

வாடிகன் சிட்டி, ஏப். 27- கத்தோ லிக்க திருச்சபை சீர்திருத் தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ் வப்போது கூடி விவாதிக் கிறது. அதன்படி வருகிற அக்டோபர் மாதம் ஆயர் கள் மாமன்றக் கூட்டம் வாடிகனில் நடக்கிறது. 

இதில் பல்வேறு கருத்து கள் தொடர்பாக விவா திக்கப்படுகிறது. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள் மீது வாக் கெடுப்பு நடத்தி, அது போப் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி அறிக்கையை அவர் வெளியிடுவார். இந்த ஆயர்கள் மாமன் றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்களை நிய மிக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார். இதில் சரிபாதி பேர் பெண் களாகவும் இருப்பார்கள்.

இந்த மாமன்றத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த நிலையில், முதல் முறை யாக இந்த மாமன்றத்தில் பெண்களுக்கு வாக்க ளிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கி உள் ளார். அதன்படி இந்த மாமன்றத்தில் ஆயர் அல் லாத பெண் உறுப்பினர் கள் வாக்களிக்கிறார்கள். அத்துடன் 5 கன்னியாஸ் திரிகள் தேர்தல் பிரதிநிதிகளாகவும் நியமிக்கப் படுவார்கள். போப் பிரான் சிஸ் அங்கீகரித்துள்ள இந்த திருத்தத்தை வாடி கன் நேற்று வெளியிட் டது. கத்தோலிக்க திருச் சபை நடவடிக்கைகளில் பொதுநிலையினருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மாற்றங் கள் செய்யப்பட்டு உள்ள தாக அதில் கூறப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *