தமிழ்நாடு காவல்துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் 34 பேருக்கு பதவி உயர்வு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.1 தமிழ்நாடு காவல் துறையில் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேருக்கு பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்தார்.

அதன்படி, சிறைத்துறை கூடுதல் டிஜிபி-யாக இருந்த மகேஷ்வர் தயாள், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த டேவிட்சன் தேவாசிர்வாதம் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல், பொரு ளாதாரக் குற்றப்பிரிவு பாலநாக தேவி ஆகியோர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அதே பிரிவுகளில் டிஜிபி-யாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தென் மண்டல அய்ஜி-யாக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா, கூடுதல் டிஜிபி-யாகப் பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த சங்கர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென் மண்டல அய்ஜி-யாகச் சென்னை தலைமையிடக் கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், தென் சென்னை கூடுதல் காவல் ஆணையராக இருந்த கண்ணன், கோவை காவல் ஆணையராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர்கள் உட்பட மொத்தம் 70 அய்பிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் புதிய இடங்களில் பணியை மேற்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *